சென்னை: தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.