சென்னை: தமிழகத்தில் காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது.