இதன் காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து சற்று இதமான சூழல் நிலவியது. இதனை அடுத்து வங்ககடலில் உருவனா காற்றழுத்த தாழ்வு நிலை ரீமால் புயலாக வலுப்பெற்று வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையேகரையை கடந்தது.
இதனை அடுத்து தமிழ்நாடு, புதுச்சேரியில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் ஜூன் 1-ம் தேதி தமிழகம் புதுச்சேரி, காரைக்காலில் ஜூன் 1-ல் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து கர்நாக மாநிலத்திலும் ஜூன் 1-ம் தேதி முதல் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.