தமிழ்நாட்டில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: தமிழ்நாட்டில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தற்போது 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் நிலையில் மேலும் 2 ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூர் – நாகர்கோவில், மதுரை பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகின்றன. பெங்களூரு-மதுரை வந்தே பாரத் ரயில் செவ்வாய்க் கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகின்றன. எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லையில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூரில் காலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவிலில் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 11.15-க்கு எழும்பூர் வந்தடையும்.

இதன் துவக்க விழா சென்னையில் நடைபெறும் நிலையில், இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை மேயர் மற்றும் சென்னை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

அதாவது, சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் துவக்க நாளில், சென்னையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். அதேபோல, மதுரை – பெங்களூர் கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரயில் துவக்க நாளில், மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு பெங்களூர் சென்று சேரும். மதுரையில் நடைபெறும் இதன் துவக்க விழாவில், ஒன்றிய ரயில்வே துறை மற்றும் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் வி.சோமன்னா, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மேயர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

எழும்பூர்-நாகர்கோவில் வந்தேபாரத் இந்த ரயில்களின் வழக்கமான சேவை செப்டம்பர் 2 முதல் துவங்க இருக்கிறது. அதன்படி, சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் (20627), சென்னை எழும்பூரில் இருந்து புதன்கிழமை தவிர மற்ற வார நாட்களில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, மதியம் 01.50 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20628) நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். எழும்பூரிலிருந்து காலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில், தாம்பரத்தில் 5.23/5.25,விழுப்புரத்தில் 6.52/6.55, திருச்சியில் 8.55/9,திண்டுக்கல் 9.53/9.55,மதுரை 10.38/10.40,கோவில்பட்டி 11.35/11.37,நெல்லை 12.30/12.32 ஆகிய மணி நேரங்களில் நின்று செல்லும். அதிகப்பட்சமாக திருச்சியில் மட்டும் 5 நிமிடம் நின்று செல்லும், மற்ற ரயில் நிலையங்களில் 2 நிமிடம் நின்று செல்லும்.

மறுமார்க்கமாக நாகர்கோவிலிருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நெல்லைக்கு மதியம் 3.18,கோவில்பட்டிக்கு 3.58,மதுரைக்கு 5.3,திண்டுக்கல் 5.48,திருச்சி 6.45,விழுப்புரம் 8.53, தாம்பரம் 22.28, இறுதியாக எழும்பூருக்கு 11 மணிக்கு வந்தடைகிறது. மதுரை – பெங்களூர் கண்டோன்மென்ட் மதுரை – பெங்களூர் கன்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயில் (20671), செப்டம்பர் 2 முதல் மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை தவிர மற்ற வார நாட்களில் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில், பெங்களூரு கண்டோன்மெண்ட் – மதுரை வந்தே பாரத் ரயில் (20672), பெங்களூரு கண்டோன்மெண்ட்டில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மதுரையில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு, திண்டுக்கல்லில் 5.59/6.1, திருச்சியில் 6.50/6.55,கரூர் 8.8/8.10,நாமக்கலில் 8.32/8.34,சேலம் 9.15/9.20,கிருஷ்ணராஜபுரம் 12.50/12.52 மணிக்கு நின்று இறுதியாக 1 மணிக்கு பெங்களுரு செல்லும். மதுரையிலிருந்து, பெங்களுருக்கு ரூ.1575 முதல் 2865 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமெரிக்கப் பயணம் மாபெரும் வெற்றி: வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்!

மதுபோதையில் வாலிபர்கள் ரகளை போலீஸ்காரர் மீது தாக்குதல்: 8 பேர் கைது

இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட உறவால் அயோத்தி ராமர் கோயிலில் பணியாற்றும் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 9 பேரில் 5 குற்றவாளிகள் கைது