தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் அந்த மாதத்தில் மழையின் அளவு இயல்பை காட்டிலும் குறைவாக இருந்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவியது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், சிதம்பரம் அருகே சேத்தியாத் தோப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 17 செ.மீ மழை பத்திவாகியுள்ளது. இன்று காலை 6 மணி வரை கொள்ளிடம் (மயிலாடுதுறை), லால்பேட்டையில் (கடலூர்) தலா 11 செ.மீ. மழை பதிவானது.