விழுப்புரம்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது. ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டம் குளித்தலை, அய்யர்மலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், தண்ணீர் பள்ளி, மருதூர், மேட்டு மருதூர், அச்சலூர், நங்கவரம் உள்ளிட்ட ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது.