இந்த மாநாட்டில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உரையில் , தொழில் துறையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது . நாட்டிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மின்வாகன உற்பத்தி, ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல பிரிவுகளில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார இரு சக்கர வாகனங்களில் 70% தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகின்றன.
ஏற்றுமதிக்கான குறியீட்டு எண்ணில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் வேலை செய்யக்கூடிய பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான்; நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் சீராக வளர வேண்டும் என்பதே முதல்வரின் இலக்கு.என இவ்வாறு உரையாற்றினார்.