சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜூலை மாதத்தில் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவது இது 2-வது முறையாகும். கடந்த 1-ம் தேதி தனுஷ்கோடி மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது என்று அவர் கூறினார்.