தமிழ்நாடு மீனவர்களை விரட்டியடிக்க இலங்கை கடற்படை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி எச்சரிக்கை!!

ராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்துள்ளனர். ராமேஸ்வர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று 300க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு பகுதியில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

மேலும், வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்துள்ளனர். தங்கள் மீது துப்பாக்கியால் சுட்டு விடுவார்களே என்ற அச்சத்தை மீனவர்கள் மீன்பிடிக்காமல் கரை திரும்பி உள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு சர்வதேச எல்லை பகுதியில் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் அதிகளவு நிறுத்தப்பட்டு இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு இலங்கை கடற்படை கப்பல்களின் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையில் இந்த அட்டூழியத்தால் படகு ஒன்றுக்கு ரூ.1லட்சம் வரை நஷ்டத்துடன் மீனவர்கள் கரை திரும்பினர். நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கைக்கு ஒன்றிய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மம்சாபுரம் காந்தி நகர் பகுதியில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

நெல்லையில் ரூ.1260 கோடி முதலீடு செய்கிறது விக்ரம் சோலார்!