மேலும், வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்துள்ளனர். தங்கள் மீது துப்பாக்கியால் சுட்டு விடுவார்களே என்ற அச்சத்தை மீனவர்கள் மீன்பிடிக்காமல் கரை திரும்பி உள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு சர்வதேச எல்லை பகுதியில் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் அதிகளவு நிறுத்தப்பட்டு இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு இலங்கை கடற்படை கப்பல்களின் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையில் இந்த அட்டூழியத்தால் படகு ஒன்றுக்கு ரூ.1லட்சம் வரை நஷ்டத்துடன் மீனவர்கள் கரை திரும்பினர். நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கைக்கு ஒன்றிய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.