தமிழ்நாட்டுக்கு காவிரியில் தினமும் 8,000 கனஅடி தண்ணீர் திறக்க முடிவு: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் சித்தராமையா பேட்டி

பெங்களூரு: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தினமும் 8,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகா முடிவு செய்துள்ளதாக கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரியில் தமிழ்நாட்டுக்கு 12-ம் தேது முதல் 31-ம் தேதி வரை 20 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. இதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், இந்த மாத இறுதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று அறிவித்தது. என்றாலும், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருப்பது குறித்து ஆலோசிப்பதற்காக பெங்களூருவில் இன்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காவிரிக்கு நீர் தரும் 4 அணைகளின் நிலவரங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.

இந்த நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு 11, 500 கனஅடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட முடியாது என்றும், 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுமென்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Related posts

அரசு கல்லூரியில் சீட் வழங்காமல் அலைக்கழிப்பு மருத்துவ கல்வி இயக்குனருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு

விருது பெற்றோரின் போராட்ட வரலாறு: முதல்வர் புகழுரை

அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள ரஷ்யர்களுக்கு அழைப்பு வேலை இடைவேளை நேரத்திலும் கணவன்-மனைவி ஒன்றாக இருங்கள் : அதிபர் புடின் அரசு அமர்க்கள அறிவிப்பு