சென்னை: தமிழ்நாடு பாஜக அலுவலக தாக்குதல் வழக்கில் ரவுடி கருக்கா வினோத்தின் ஜாமினை ரத்து செய்யக் கோரி போலீஸ் மனு தாக்கல் செய்துள்ளார். கருக்கா வினோத் நவ.15-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூகத்துக்கும் பொது மக்களுக்கும் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் செயலில் கருக்கா வினோத் ஈடுபட்டுள்ளார்.