சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரக்கோணத்தில் 11 செ.மீ மழை கொட்டித்தீர்த்தது. குமரி மாவட்டம் கொட்டாரம், திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு, நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தலா 10 செ.மீ மழை பதிவானது. 27 இடங்களில் நேற்று கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.