சென்னை: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் கலை அறிவியல் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. விடுமுறை முடிந்து உற்சாகமுடன் மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வந்துள்ளனர். நந்தனம் கலைக்கல்லூரி இருபாலருக்கான கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. ‘பஸ் டே’ போன்ற விதிமீறல்களில் மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பேருந்து, ரயில்களில் மாணவர்கள் விதிமீறலில் ஈடுபடுகிறார்களா என சிறப்பு குழு மூலம் கண்காணித்து வருகிறார்கள்.