சென்னை: தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வேறு ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அமலாக்கப்பிரிவு ஏ.டி.ஜி.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் காவல்துறையின் புதிய ஆணையராக அபின் தினேஷ் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்