திருவனந்தபுரம்: தமிழ் ஆடி மாதம், மலையாளம் கருக்கிடக மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோயிலில் நாளை முதல் ஜூலை 21ம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம். sabarimalaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.