நிகழ்ச்சியில் திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநதம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சரும் பல்கலைக்கழக இணை வேந்தருமான சாமிநாதன் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார். அதேபோல எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேயர், துணை மேயர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோரும் புறக்கணித்தனர்.