புதுடெல்லி: விண்வெளி துறையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான அக்னிகுல் முதல் முறையாக தனது ராக்கெட்டை இம்மாத இறுதியில் ஏவ திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உருவான முதல் ஸ்டார்ட் அப் நிறுவனம் அக்னிகுல் காஸ்மோஸ்.
சென்னை ஐஐடி உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம் 3டி பிரிண்ட் மூலம் ராக்கெட் அக்னிபான் எஸ்ஓஆர்டிஇடியை உருவாக்கி உள்ளது. இந்த ராக்கெட் இம்மாத இறுதியில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அக்னிகுல் நிறுவனம் தனது டிவிட்டர் பதிவில், ‘‘மார்ச் 22 முதல் 28ம் தேதிக்குள்’’ என உத்தேச தேதியை குறிப்பிட்டுள்ளது.