சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. பெரும்பாலான இஸ்லாமியர்கள் நோன்பு நோற்றனர். ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடைகளை தானமாக வழங்கினர். இதுகுறித்து இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடென்ட் அபூபக்கர் கூறுகையில், இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிகச் சிறப்பாக உலகம் முழுக்க இஸ்லாமியர்கள் கொண்டாடினர்.
இந்த நன்னாளில் நபிகள் நாயகத்தின் அன்பு, கருணை, இரக்கம் ஆகியவற்றை மனதில் கொண்டு நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்வதும், உணவு கொடுப்பதையும் கடமையாக கொண்டிருக்கக் கூடிய இஸ்லாமியர்களின் மாண்பினை, மனிதநேயத்தை கண்டு அனைவரும் வியக்கிறார்கள். இதே சகோதரத்துவம், இதே கருணை இன்று மட்டுமல்ல என்றும் நிலைத்து நிற்க வேண்டும். நம்மை சூழ்ந்து நிற்கும் இருள் யாவும் விலகி, இனிமை உருவாக வேண்டும் என்று இந்த நன்னாளில் இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.