தென்னைநார் தொழில்களில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் மெய்யநாதன் கோரிக்கை

சென்னை: ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை, தமிழக அமைச்சர் மெய்யநாதன் மற்றும் தென்னைநார் உற்பத்தி கூட்டமைப்பினர் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். தமிழக அமைச்சர் மெய்யநாதன், தென்னை நார் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பினரை டெல்லிக்கு அழைத்து சென்றார். பின்னர் அவர்கள் சார்பில், அமைச்சர் பூபேந்தர் யாதவிடம் நேற்று கோரிக்கை மனுவினை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்னை நார் தொழில்களை ஆரஞ்சு என வகைப்படுத்துவதால் தென்னை நார் தொழில்களில் சிரமங்கள் உள்ளன.

தொழில் வீழ்ச்சியடைந்து வருகின்றன. மின் சுமை தேவைகள் மாற்றம், கான்கிரீட் தளம் அமைத்தல், விவசாயிகளின் வருவாய் வீழ்ச்சி போன்ற இடர்பாடுகளை சந்திக்க நேரிடும். தென்னை நார் மற்றும் உமி ஆகியவை இயற்கையான சூரிய ஒளியின் உதவியுடன் முற்றத்தில் உலர்த்தப்படுகின்றன. மேலும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உலர்த்தும் முற்றத்தின் எல்லையில் வலை தடுப்புடன் கூடிய சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது. எனவே, உற்பத்தி செயல்முறையின் அடிப்படையில் தென்னை நார் தொழில்களை மறு வகைப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்

ஆவடி அருகே பயங்கரம் மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டி கொலை: 6 பேரிடம் போலீசார் விசாரணை

ரூ.20,000 லஞ்சம் வாங்கி கைது அரசு மருத்துவமனையில் இருந்து துணை தாசில்தார் தப்பி ஓட்டம்: பெரம்பலூரில் பரபரப்பு