சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் நாளை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.