சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் இன்று காலை வரை வழக்கமாக 43.8 மி.மீ. மழை பதிவாகும் நிலையில் 97.4 மி.மீ. மழை பெய்துள்ளது. குமரி மாவட்டம் கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், ஈத்தங்காடு, பெருமாள்புரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.