சென்னை: தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தலைவராக அமைச்சர் கயல்விழியை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் துணைத் தலைவராக செ.கனிமொழி பத்மநாபன் நியமனம். 14 புதிய அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 12 அலுவல் சாரா உறுப்பினர்களையும் நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளனர்.