டெல்லி: தமிழ்நாட்டுக்கு கர்நாடகா 12,500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் காணொலி மூலம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். காவிரி ஒழுங்காற்றுக்குழு தலைவர் வினீத் குப்தா, குழுவின் செயலாளர் டிடி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய் பங்கேற்றுள்ளனர்.