சென்னை: தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி புதிய குறைந்தபட்ச ஆதார விலை, மாநில அரசின் ஊக்கத்தொகையை செப்.1 முதல் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,265, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,310 வழங்கப்படும். சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.82, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.107 கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.