சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் தொடங்கியுள்ளது. சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸின் கட்டமைப்பை பலப்படுத்த தேவையான உத்திகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.