தமிழ்மொழியை ஒன்றிய ஆட்சி மொழியாக அறிவிக்க டெல்லியில் தமிழ் அறிஞர்கள் ஒருநாள் உண்ணாவிரதம்..!!

டெல்லி: தமிழ்மொழியை ஒன்றிய ஆட்சி மொழியாக அறிவிக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழ் அறிஞர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தொடங்கி வைத்தார். உலகத் தமிழ் கவிஞர்கள் கலை இலக்கிய சங்கம் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெறுகிறது. தமிழ் மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கவும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவும் வலியுறுத்தியுள்ளனர். டெல்லி தமிழ் சங்க பொதுச் செயலாளர் முகுந்தன் உள்பட 133 தமிழர் அறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

20 மலையாள நடிகைகளுக்கு மிக மோசமான பாலியல் சித்ரவதை: சிறப்பு விசாரணைக் குழு அதிர்ச்சி

ஆந்திராவில் மதுபானம் விலை அதிரடி குறைப்பு; ரூ120க்கு விற்கப்பட்ட மது ரூ99க்கு விற்பனை

நக்கீரர் நுழைவாயில் தொடர்பான வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்த ஆர்.பி.உதயகுமார் தரப்புக்கு ஐகோர்ட் கிளை எச்சரிக்கை