சென்னை: தமிழ்ப் புதல்வன் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழ்ப் புதல்வன். ஏற்கனவே கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தி வருகிறது.