சிபிசிஐடி ஐஜியாக உள்ள அன்பு, அதே பிரிவில் காலியாக உள்ள ஏடிஜிபி பதவியை கூடுதலாக கவனிப்பார். சைபர் கிரைம் ஏடிஜிபி சஞ்சய்குமார், கடலோர காவல்படை ஏடிஜிபியாகவும், கடலோர காவல்படையில் இருந்த சந்தீப் மிட்டல், சைபர் கிரைம் ஏடிஜிபியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராஜீவ்குமார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு டிஜிபியாகவும், அந்தப் பதவியில் இருந்த தமிழ்சந்திரன், தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியகவும், தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, தென் மண்டல ஐஜியாகவும், அந்தப் பதவியில் இருந்த கண்ணன், தென் சென்னை கூடுதல் கமிஷனராகவும், வடசென்னை கூடுதல் கமிஷனராக இருந்த அஸ்ரா கார்க், வடக்கு மண்டல ஐஜியாகவும், வடக்கு மண்டல ஐஜி நரேந்திரன் நாயர், வடசென்னை கூடுதல் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் ஆணையர் பிரவீன் குமார் அபினபு, சேலம் கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த விஜயகுமாரி, ஆயுதப்படை ஐஜியாகவும், அந்தப் பதவியில் இருந்த லட்சுமி, திருப்பூர் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.