தாம்பரம் திருமலை நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலம் 41வது வார்டு, திருமலை நகர் – நன்மங்கலம் சாலையை ஆக்கிரமித்து சிலர் வீடுகள், கடைகளை கட்டியிருந்தனர். இதனால் அப்பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, மழைநீர் வடிகால்வாய் அமைக்க மாநகராட்சி ஆணையர் அழகுமீனா உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலை ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றினர்.

Related posts

பிளஸ் 2 மாணவர்கள் திருமண வீடியோ விவகாரம்: 4 மாணவர்கள் சஸ்பெண்ட்

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதித்த 3 ஆண்டு சிறை ரத்து: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குப்பைத் தொட்டியில் பதுக்கி மது விற்ற 2 பேர் கைது!!