Thursday, September 19, 2024
Home » தாம்பரம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து 18ம் தேதி வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தாம்பரம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து 18ம் தேதி வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

by Ranjith

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், மின்சார ரயில் சேவை ரத்து, வரும்.18ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: தாம்பரம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த மாதம் முதல் சென்னை கடற்க்கரை – செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த பணிகள் ஆகஸ்ட் 14 (நாளை) வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆகஸ்ட் 18 வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.40, 9.48, 10.04, 10.12, 10.24, 10.30, 10.36, 10.46, 11.06, 11.14, 11.22, 11.30, 11.50, மதியம் 12, 12.10, 12.30, 12.50 இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் வரும் 18ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.30, 9.56, 10.56, 11.40, மதியம் 12.20, 12.40, இரவு 10.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் வரும் 18ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கூடுவாஞ்சேரி வரை செல்லும் மின்சார ரயில்கள் வருகிற 18ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து காலை 10.30, 10.40, 11, 11.10, 11.30, 11.40, மதியம் 12.05, 12.35, 1, 1.30, இரவு 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் வரும் 18ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து காலை 11, 11.30, மதியம் 12, இரவு 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் வரும் 18ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் வரும் 18ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் வரும் 18ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் வரும் 18ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் வரும் 18ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதற்கு மாற்றாகவும், பயணிகள் வசதிக்காகவும் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே 15 சிறப்பு மின்சார ரயில்களும், பல்லாவரம் – சென்னை கடற்கரை இடையே 15 சிறப்பு மின்சார ரயில்களும், கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு இடையே 7 சிறப்பு மின்சார ரயில்களும், செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி இடையே 7 சிறப்பு மின்சார ரயில்கள் என மொத்தம் 44 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக, சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, மதியம் 12.10, 12.30, 12.50, இரவு 10.40, 11.05, 11.30, 11.59, ஆகிய நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் பல்லாவரம் வரை இயக்கப்படுகிறது.

மறுமார்க்கமாக, பல்லாவரத்தில் இருந்து காலை 10.20, 10.40, 11, 11.20, 11.40, மதியம் 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40, இரவு 11.30, 11.55, 12.20, 12.45 ஆகிய நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகிறது. கூடுவாஞ்சேரியில் இருந்து காலை 10.45, 11.10, மதியம் 12, 12.50, 1.35, 1.55, இரவு 11.55 ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து காலை 10, 10.30, 11, 11.45, மதியம் 12.30, 1, இரவு 11 ஆகிய நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* முழுவதும் ரத்து
விழுப்புரம் – தாம்பரம், விழுப்புரம் – மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர் – சென்னை கடற்கரை, புதுச்சேரி – எழும்பூர், எழும்பூர் – புதுச்சேரி, சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர் – விழுப்புரம் , தாம்பரம் – விழுப்புரம் ஆகிய ரயில்கள் ஆகஸ்ட் 15 முதல் 17 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

You may also like

Leave a Comment

nine + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi