தாம்பரம் காவல் ஆணையரகத்தில் 8 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் ஆணையருக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 8 இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதுகுறித்த விவரம் பின்வருமாறு:
நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நடராஜன் பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கும், கண்ணகி நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவகுமார் தாம்பரம் காவல் நிலையத்திற்கும், கூடுவாஞ்சேரி கலால் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கும், பள்ளிக்கரணை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அணில் குமார் நுண்ணறிவு பிரிவிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் ராக்குமதி சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஷ் கூடுவாஞ்சேரி கலால் காவல் நிலையத்திற்கும், பள்ளிக்கரணை குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் கேளம்பாக்கம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்திற்கும், கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தீபக்குமார் பள்ளிக்கரணை குற்ற பிரிவு காவல் நிலையத்திற்கும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு