எனவே, மேற்கண்ட பகுதிகளில் வடிகால் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில், மேற்கண்ட பகுதிகளில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால், இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மழைநீர் கால்வாய்க்கு நடுவில் உள்ள மின் கம்பங்களை முழுமையாக அகற்றி, கால்வாயின் வெளியே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.