பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நாடகம் நடத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கி, போதைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதேபோல, குரோம்பேட்டை காவல் நிலையம் சார்பில் குரோம்பேட்டையில் உள்ள அரசினர் பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி, தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையில் நடைபெற்றது. இதில், குரோம்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ராஜசேகரன் மற்றும் போலீசார் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பலூன்களை பறக்கவிட்டனர். மேலும் மாணவர்கள், போலீசாருடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றனர்.