இதனைதொடர்ந்து, சுகாதார பிரிவில் இயங்கும் வாகனங்கள் பழுது சரி பார்த்தல், கழிவுநீர் குழாய் அமைத்தல், பழுதடைந்த மின் மோட்டார்களை அகற்றிவிட்டு, புதிய மின் மோட்டார்கள் அமைத்தல், பழுதடைந்த சிறிய கோபுர மின்விளக்குகளை அகற்றி புதிய சிறிய மின்கோபுர விளக்குகள் அமைத்தல், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, மின்சார பணிகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சுற்றுசுவர் அமைத்தல், மழைநீர் வடிகால்வாய் அமைத்தல், சிறு பாலம் அமைத்தல், பேவர் பிளாக் சாலை அமைத்தல், குடிநீர் தொட்டி அமைத்தல், சிமென்ட் சாலை, தார் சாலை அமைத்தல், அம்மா உணவகத்தில் பழுது சரிபார்த்தல், பூங்கா புதுப்பித்தல் என மொத்தம் ரூ.5.15 கோடி மதிப்பில் 33 தீர்மானங்களுக்கு அனுமதி பெறப்பட்டது.
இக்கூட்டத்தில் மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, வரும் செப்டம்பர் 15ம்தேதி முதல் பெண்களுக்கான உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. எனவே தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள், பூங்காக்கள், கோயில்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகிய பகுதிகளில் 500 நபர்களுக்கு ஒரு இடம் என தேர்வு செய்து, எந்த ஒரு இடையூறும் இன்றி பெண்களுக்கான உரிமை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, உத்தர விட்டார்.