தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு, 57 மாணவர்கள், 73 மாணவிகள் என மொத்தம் 130 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர் டி.காமராஜ், நியமனக்குழு உறுப்பினர் பெருங்களத்தூர் சேகர், மாமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, மதுமிதா, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.