இந்த விபத்தில் வேனில் இருந்த ஓட்டுனநர் காசிராஜன் மற்றும் அவரது உதவியாளர் சிறிய காயங்களுடன் போலீசார் மீட்டனர். சாலையில் வேன் கவிழ்ந்ததை அடுத்து அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் விபத்து ஏற்பட்ட வேனை அப்புறப்படுதினர். இந்த விபத்தில் வேனில் இருந்த 2,000 முட்டைகள் உடைந்து சாலையில் ஓடியது. இதனால் சாலை வழவழப்பானதை அடுத்து வேறு விபத்துகள் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து போலீசார் அங்கிருந்த மண்ணை கொட்டி ஓரளவு சீர் செய்தனர். பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.