ஆந்திரா புலிஹோரா
ஆந்திரா என்றாலே காரம்தான். இங்கு பச்சை மிளகாயை பச்சையாகவே பயன்படுத்துவார்கள் என்பது நமக்குத்தெரியும். அந்தளவுக்கு ஆந்திராக்கார்கள் காரம் விரும்பிகள். புளியோதரையை மட்டும் காரம் இல்லாமல் சாப்பிடுவார்களா? ஆம். ஆந்திராவின் புளியோதரை காரமான புளியோதரை. பச்சை மிளகாய், உடைந்த குண்டூர் மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாய்த்தூள் ஆகிய காரக் காரணிகளை தாராளமாக பயன்படுத்தி இங்கு புளியோதரை செய்கிறார்கள். இதை ஆந்திராவில் புலிஹோரா என்ற பெயரில் அழைக்கிறார்கள்.
கர்நாடகா புளியோகரே
கர்நாடகாவில் புளியோதரைக்கு பெயர் புளியோகரே. உளுத்தம்பருப்பு, வெந்தய விதைகள், கொத்தமல்லி விதைகள் மற்றும் சிவப்பு மிளகாய் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி இந்த புளியோகரேவைத் தயாரிக்கிறார்கள். புளிச்சாறு, வெல்லம் மற்றும் கறிவேப்பிலையையும் இந்த புளியோகரேவில் சேர்க்கிறார்கள். இதனால் இங்கு சற்று இனிப்புச்சுவையுடன் திகழ்கிறது புளியோகரே. நம்ம ஊரில் புளியோதரைக்கு பெரும்பாலும் வறுத்த வேர்க்கடலையைச் சேர்க்கிறோம். கர்நாடகாவில் வேகவைத்த வேர்க்கடலையைச் சேர்க்கிறார்கள். இது அவர்களுக்கு தனித்த ருசியைத் தருகிறது.
கேரளா புளியின்ஜி
கேரளாவில் தயாரிக்கப்படும் புளியோதரைக்கு புளியின்ஜி என பெயர். அங்கு பிரபலமாக அறியப்படும் ஓணம் சதய விழாவில் புளியின்ஜிக்கு முக்கிய இடம் உண்டு. இனிப்பு மற்றும் புளிப்பு சுவைக்காக இது அங்கு பெயர் பெற்றதாக இருக்கிறது. இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கடுகு உள்ளிட்ட பொருட்கள் புளியின்ஜிக்கு சுவை கூட்டுகின்றன. மெலிதான இனிப்புச்சுவைக்காக வெல்லமும் சேர்க்கப்படுகிறது.