திருச்சி: திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள பாஜ கட்சி அலுவலகத்தில் பாஜ ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் எச்.ராஜா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆசிரியர்கள் விவகாரத்தில் ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காமல் போனால் இன்னும் மூன்று மாதத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும்’ என்றார். தொடர்ந்து அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டது குறித்து கேட்டபோது, ‘தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன்’ என்று தெரிவித்தார்.