இதனால் சந்தேகமடைந்த லியான் சுயி, வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்த சத்தியசீலன் (36) என்பவரை தொடர்பு கொண்டு சென் சிங் சானின் அறைக்கு சென்று பார்க்க கூறியுள்ளார். அப்போது சென் சிங் சான் மூச்சுப்பேச்சு இல்லாமல் படுக்கையில் கிடந்துள்ளார். உடனே சத்தியசீலன் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும் சத்தியசீலன் மற்றும் லியான் சுயி பாலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திறக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.