கார் மீது லாரி மோதியதில் தாசில்தார் பலி

செய்யாறு: கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா லட்சுமிபதி நகரை சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன்(54). திண்டிவனத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்தார். இவர் மனைவி பூங்கோதை (48), மகன் சிவசங்கரனுடன்(21) நேற்று முன்தினம் காலை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட காரில் சென்றார். தரிசனம் முடிந்து திரும்பி சென்றபோது காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் நெடுங்கல் கூட்ரோடு அருகே எதிரே காஞ்சிபுரம் நோக்கி வந்த லாரி கார் மீது மோதியது. இதில் வெங்கடசுப்பிரமணியனின் பலியானார். மனைவி, மகன் படுகாயத்துடன் சிகிச்சை பெறுகின்றனர்.

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்