மும்பை: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரூ.125 கோடி பரிசுத் தொகை தரப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். “டி20 உலகக்கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வீரர்கள், பயிற்சியாளர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்” என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.