டெல்லி: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர். டி20 உலகக்கோப்பையை பிரதமர் மோடியிடம் கொடுத்து இந்திய வீரர்கள் வாழ்த்து பெற்றனர். டெல்லி ஐடிசி மவுரியா ஹோட்டலில் இருந்து பேருந்தில் பிரதமர் இல்லத்திற்கு சென்று வாழ்த்து பெற்றனர். கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், வீரர்கள் கோலி உள்ளிட்டோர் மோடியை சந்தித்தனர்.