தி.நகர், வியாசர்பாடியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

சென்னை: மின்வாரியம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தி.நகர் கோட்டத்திற்கு உட்பட்ட நுங்கம்பாக்கத்தில் உள்ள மெட்ரோ குடிநீர் நிலையம் அருகில் இருக்கும் வள்ளுவர் கோட்ட துணை மின்நிலையத்திலும், வியாசர்பாடி கோட்டத்திற்கு உட்பட்ட ராமலிங்கர் கோயில் எதிர்புரம் அமைந்துள்ள வியாசர்பாடி துணை மின் நிலையத்திலும் நாளை காலை 11 மணியளவில் செயற்பொறியாளர் தலைமையில் மின்நுகர்வோர் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெறும். எனவே, பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் மின் சார்ந்த பிரச்னைகள் மற்றும் சந்தேகங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு விளக்கம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு