ஸ்விகி, சோமாட்டோ, டன்சோ தொழிலாளர்கள் அமைப்புசாரா நலவாரியத்தில் பதிவு செய்யலாம்: அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூகபாதுகாப்பு மற்றும் நலவாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்விகி, சோமாட்டோ, டன்சோ போன்ற இணையதளம் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்யும் கிக் (Gig) தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் தனி நலவாரியம் அமைக்கப்படும் என சுதந்திர தின உரையின்போது அறிவித்தார். அதன்படி தனி நல வாரியம் உருவாக்குவதற்காக இணையம் சார்ந்த கிக் தொழில்களை தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலை மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டம், 1982-ன் அட்டவணையில் சேர்த்து அரசு அறிவிக்கை வெளியிடப்பட்டது. மேலும், தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நலவாரியம் அமைத்தும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாரியத்திற்கான திட்டக் கூறுகள் இயற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இணையதளம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் கிக் தொழிலாளர்கள் தற்போது தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் பதிவு பெற்று பயனடைய வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாரியத்தில் 18 முதல் 60 வயது வரையிலான தொழிலாளர்கள், பணிபுரியும் நிறுவனம் அல்லது தொழிற்சங்கங்களிடமிருந்து பணிச் சான்று பெற்று www.tnuwwb.tn.gov.in எனும் இணையதளத்தில் GIGW எனும் குறியீட்டின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.