எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு: தேர்தல் நெருங்குவதால் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு

சென்னை: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பழைய கட்டணமே வசூலிக்கப்படுகிறது. நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ஏப்.1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒருமுறை, ஒரே நாளில் திரும்பும் கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும் மாதாந்திர பாஸ் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சுங்கக் கட்டணத்தை உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு தரப்பினர், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்ததுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். சுங்கச்சாவடிகளை முழுமையாக அகற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் கடும் எதிர்ப்பு மற்றும் மக்களவை தேர்தல் காரணமாக சுங்கக் கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தவில்லை

கட்டணத்தை உயர்த்தி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறுவதாக சுங்கச்சாவடி நிறுவனங்களுக்கு நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கட்டண உயர்வை திரும்பப் பெறும் கடிதம் நேற்றிரவு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே உள்ள கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணத்தை வசூலிக்க வேண்டாம் என்று சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படலாம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிந்து ஜூன் மாதத்துக்கு பிறகு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

 

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு