பின்னர், பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவர் அளித்த பேட்டி: வெள்ளப் பாதிப்புகள், மக்களின் சூழ்நிலை, மறுகட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு நிலைகளை ஆய்வு செய்து, அதன்படி அறிக்கையை அளிக்க உள்ளேன்.தமிழ்நாடு அரசிடம் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைக்க விரும்புகிறேன். புயல் மழை முடிந்து 4 நாட்கள் ஆகியும், வெள்ள நீர் ஏன் வடியாமல் நிற்கிறது என்று விசாரிக்க வேண்டும். இவ்வாறு தண்ணீர் நிற்பதால், மக்களின் உடலுக்கும், கட்டிடத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு ஒன்றிய அரசிடம் தமிழக அரசு எந்த உதவியை கேட்டாலும் செய்ய தயாராக இருக்கிறது. பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையானதை செய்வார். அதற்கான பணிகள் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.