தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிறமாவட்டங்கள், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்து குளித்து மகிழ்வர். இந்நிலையில், கடந்த மாதம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும், கம்பம் பள்ளத்தாக்கிலும் தொடர்ந்து சாரல் மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், சுருளி அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து குளித்து மகிழ்ந்தனர்.