தேனி: வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் 3வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும் அருவியில் இருந்து அதிகப்படியான தண்ணீர் கொட்டுவதால் சுருளி அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.