இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, “தேர்தல் மற்றும் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பான விவகாரங்களை கையாளுவது என்பது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் வேலை. அதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்பதால் மனுவை தள்ளுபடி செய்கிறோம்” எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.