டெல்லி: மணிப்பூர் கலவரம் தொடர்பாக நிலவர அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெய்த்தி சமூகத்தினருக்கு எஸ்.டி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மணிப்பூர் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனுவில் உத்தரவிடப்பட்டுள்ளது. மெய்த்தி சமூகத்தினருக்கு எஸ்.டி அந்தஸ்து வழங்க மணிப்பூர் உயர்நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும்?, அது குடியரசுத் தலைவரின் அதிகாரம் அல்லவா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.